Thursday 20 August 2015

உய்விப்பாயோ எனையும் நீயே நமசிவாயனே!!!

உதிரமது உள்ளிருந்து வேகமிட
உணர்வுகளும் நீராய் துடைத்திட
உடலுமது நீரிட்டு மின்னிட
உயிராய் இதயமது துடித்திட
உமையோனே உள்ளிருந்து ருத்ரமிட
உணராமல் மனமும் வாட
உளம் ஆசை பிறப்பு பெற்றிட
உனைத் தேடி வெளியில் தவித்திட
உன்னைச் சரணடைந்தேன் தொழுதிட
உன் நாமம் தினம் செப்பிட .
உனையன்றி வேறு துனை நாட
உய்யவில்லை மனமும் கூட
உன் பாதம் சரணடைந்து பணிந்திட
உடுக்கை நாதனே வெற்றி முரசிட
உய்விப்பாயோ எனையும் நீயே
நமசிவாயனே!!!

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...