Friday 21 August 2015

பிரிவும் ஓர் சுகமே!!!!!

பிறக்குமோ கவிதையும் வரிகளாய் வந்துதிக்குமோ
பிறவாமல் இருந்திடுமோ சில மௌனங்கள்

பிறந்து இறந்திடுமோ சில நெருடல்கள்
பிறக்க நினைக்குமோ சோகங்கள் வார்த்தையாய்
பிறந்தது ஏனோ என நினைத்திடும் தருணங்கள் - இப்
பிறவியில் தொலைத்த அந்த நொடிகள்....


பிரிவும் ஓர் சுகமே நினைவெல்லாம் நிலைப்பதால்

பிரிவில் பிரியும் கசந்த நிகழ்வுகள்

பிரிந்திடுமோ என தவித்த நாட்கள்
பிரிவில் பரிதவித்து உணரும் நிமிடங்கள்
பிரியாவிடைகொடு பிரிவுக்கு பிரியட்டும் நொடிகள்
பிரிவும் ஓர் சுகமே!!!!!

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...