Friday 21 August 2015

சொல்லவா சொன்னதை சொன்னபடி...

சொல்லவா சொல்ல வந்ததை 

சொல்லவா மனதில் உள்ளதை 


சொல்லவா நெஞ்சில் நிற்பதை 

சொல்லவா நீ கேட்பதால் ... 

சொல்லவா அன்று போல் 

சொல்லவா இன்று இல்லையென 

சொல்லவா மனதில் நின்றதை 

சொல்லவா மெல்ல காதோடு...

சொல்லவா விடுகதையான வாழ்க்கையை 

சொல்லவா விடை தேடும் பயணத்தை 

சொல்லவா நிழலாடும் நிஜத்தை 

சொல்லவா உள்ளதை உள்ளபடி...

சொல்லவா சொன்னவன் நானல்லவா 

சொல்லவா சொன்ன சொல் வேறல்லவா .

சொல்லவா அழைத்ததை சொல்லவா 

சொல்லவா கேட்டதை சொல்லவா....

சொல்லவா விழிகளில் நீரிட்டு 

சொல்லவா வார்த்தைகளில் தடுமாறி 

சொல்லவா சொன்னதை சொன்னபடி...

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...