Friday 21 August 2015

சொல்ல துடிக்கிறேன் ஏராளமாய்

சொல்ல துடிக்கிறேன் ஏராளமாய்
சொல்ல நினைக்கிறேன் தாராளமாய்
சொல்ல சொல் வாயோரமாய்
சொல்ல கொடு காதோரமாய்...
சொல்லும் சொல் நெஞ்சோரமாய்
சொல்ல தவிக்குது வெகு நேரமாய்
சொல்லடுக்கில் இல்லை சேதாரமாய்
சொல்லே சுற்றிவருது ரீங்காரமாய்...
சொல்லவா சொல் சொல்லெடுத்து
சொல்லவா சொல் உளம்திறந்து
சொல்லேன் சொல்லேன் சொல்லாய்
சொல்லத் துடிக்கிறேன் நானுமே...
சொல்லில் சொல் உளமன்றோ
சொல்ல சொல்ல கரையுமன்றோ
சொல்ல துடித்த மனமன்றோ
சொல்வாயோ சொல் எனை வெல்ல....

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...